1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2016 (10:56 IST)

பாகிஸ்தானுக்கு செல்வதும், நரகத்துக்கு செல்வதும் ஒன்று - போட்டு தாக்கும் அமைச்சர்

பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது, நரகத்துக்கு செல்வது போன்றது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
 

 
ஹரியானா மாநிலம் ரிவாரியில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்துகொண்டு பேசினார்.
 
அப்போது அவர் பேசுகையில், ‘பாகிஸ்தான் நீண்ட காலமாக தீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்து வருகிறது; இப்போது அதன் விளைவுகளை அனுபவித்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வது நரகத்துக்கு செல்வது போன்றது’ என்று விமர்சித்துள்ளார்.
 
மேலும், ’இந்தியா மீது யாராவது தாக்குதல் நடத்த முயற்சித்தால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்; நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’ என்றும் எச்சரித்துள்ளார்.