1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (16:16 IST)

ஈவ்டீசிங் செய்தால் ஓங்கி அடியுங்கள் : பெண்களுக்கு நடிகை வித்யாபலன் அறிவுரை

ஈவ்டீசிங் செய்தால் அடிக்க வேண்டும் : வித்யாபாலன்

நாட்டில் ஈவ்டீசிங் பெருகி வருவதால், அவ்வாறு செயல்படும் ஆண்களி கண்டு பயப்படக் கூடாது. பெண்கள் அவர்களை திருப்பி அடிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.


 

 
நடிகை வித்யாபாலன் பல பாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  ‘த டர்ட்டி பிக்சர் ’ மற்றும்  ‘கஹானி’ ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.
 
அவர் சமீபத்தில் இளைஞர்கள் சம்மந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது “ஆண், பெண்களை பிரித்துப் பார்க்கக் கூடாது. இருவருக்கும் சம உரிமை உள்ளது. முக்கியமாக, பெண்கள் ஆடை உடுத்துவதை வைத்து அவர்களை மதிப்பீடு செய்யக்கூடாது. பெண்கள் எந்த மாதிரி ஆடைகளை விரும்புகிறார்களோ அதை அணிந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆடை அணிவதில் அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
 
எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. பெண்கள் ஈவ்டீசிங் தொல்லைக்கு ஆளாகும்போது, ஆண்களை கண்டு பயப்படக்கூடாது. அவர்களை திருப்பி அடிக்க வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் பயந்து ஓடு விடுவார்கள்” என்று கூறினார்.