1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2015 (19:21 IST)

ஈவ் டீஸிங் செய்த இளைஞரை போலீசார் முன்னிலையில் அடித்து உதைத்த மாணவி! (வீடியோ)

ஈவ் டீஸிங் செய்த இளைஞரை போலீசாரின் முன்னிலையிலேயே மாணவி ஒருவர் சரமாரியாக அடித்த உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஹங்கீத் சிங், மாணவியை ஈவ் டீஸிங் செய்துள்ளார்.
 
இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி, பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த இளைஞரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத மாணவி, காவலர்கள் முன்னிலையிலேயே இளைஞரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் அந்த மாணவி, இளைஞரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார்.
 
மாணவியை ஈவ் டீஸிங் செய்தது தொடர்பாக இளைஞரை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஈவ் டீஸிங் செய்த இளைஞரை, மாணவி ஒருவர் போலீசார் முன்னிலையிலேயே செருப்பால் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ: