வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (15:24 IST)

ஆசிரியைக்கு 18 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர்

ஆசிரியைக்கு 18 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர்

ஆசிரியைக்கு 18 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 


குஜராத் மாநிலம்,  நர்மதா மாவட்டம் பண்டபுர கிராமத்தில் உள்ள முதன்மை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைக்கு அந்த பள்ளியின் முதல்வர் கோஹில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதற்கு அந்த ஆசிரியை, பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், கோஷில் வகுப்பறையில் மாணவர்கள் முன்பே ஆசிரியையின் தொட கூடாத அங்கங்களைத் தொட்டு பேசியுள்ளார். இதனை அடுத்து, அந்த ஆசிரியை, பள்ளி முதல்வர் கோஹில் மீது மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தன் கணவரிடம் ஆசிரியை நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து, கணவர் கோஹிலை மிரட்டி உள்ளார். அதன் பிறகும், கோஹில், சேட்டையை நிறுத்தாமல், தொடர்ந்து 18 மாதங்களாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். பொறுத்து பார்த்த, ஆசிரியை,  கோஹில் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து, காவல்துறையினர் கோஹில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.