ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் தீ விபத்து
மும்பையில் ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பையின் பந்தரா குர்லா வளாகத்தில் ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது.
இன்று காலை 8.30 மணியளவில் வங்கியின் நான்காவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.