வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 28 மே 2015 (21:40 IST)

ஒரு வருடமாக மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை

பெற்ற மகளையே கடந்த ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகிவீர் நகரில் வசித்து வருபவர் பிரமோத் குமார் ஷர்மா. இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது 16 வயது மகளை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதனை அந்த பெண் தனது அம்மாவிடமும் சகோதரனிடமும் கூறுகையில், அவர்கள் இது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால் கடந்த ஒரு வருடமாக நரக வேதனையை அனுபவித்து வந்துள்ளார்.
 
கொடுமை தாளாமல் அந்த இளம்பெண் தற்போது காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அவரது தந்தையை கைது செய்துள்ளனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.