1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (09:06 IST)

அழகான மகளுடன் தூக்கில் தொங்கிய தந்தை!!! பதறவைக்கும் காரணம்

ராஜஸ்தானில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துக்கத்தில் தந்தையும் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் லலித் பிரகாஷ்(63). இவர் தனது மனைவி மற்றும் 4 மகள்களுடன் வசித்து வந்தார். இவரது மூன்று மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் இவரது 4ஆவது மகள் கிருத்திகா பிசினஸ் செய்து வந்தார்.
 
இந்நிலையில் பிசினசிற்காக வீட்டை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார் கிருத்திகா. பிசினஸ் கடும் நஷ்டமடையவே, கடனை கட்ட முடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது. இதனால் பிரகாஷ் தனது மகள் கிருத்திகாவை கடுமையாக கண்டித்துள்ளார்.
 
இதனால் மனமுடைந்த கிருத்திகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகள் தற்கொலை செய்துகொண்டதை பார்த்த லலித், துக்கம் தாளாமல் அவரும் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவர்களது குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது.