ராஜஸ்தானில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை
ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதனால், அம்மாநிலத்தில் கடந்த வாரத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான மகேந்திர சிங் என்ற விவசாயி. இவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது விவசாய நிலத்தில் பயிரிட்ட பயிர்கள், போதய மழை பெய்யாததால் பாதிக்கப்பட்டது. இதனால் பெரிதும் வருத்தமடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த வாரம் டெல்லியில் ஆம் ஆத்மியின் பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த பேரணியில் கலந்துகொண்ட அம்மாநில விவசாயியான கஜேந்திர சிங், பேரணி நடைபெற்று கொண்டிருந்த போதே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் அம்மாநிலத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.