1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (21:05 IST)

ஒரே ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் வைத்த ஆப்பு

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றது. அந்த வகையில் சற்றுமுன் தேர்தல் ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த உத்தரவு எஸ்.ஐ முதல் ஐ.ஜி.க்கள் வரை, தாசில்தார் முதல் ஆட்சியர்கள் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநில அரசுகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதால் அரசு அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.