லைபீரியாவில் இருந்து நாடு திரும்பிய 112 பேரில் 6 பேருக்கு எபோலா அறிகுறி
எபோலா நோய் பாதித்துள்ள லைபீரியாவில் இருந்து நாடு திரும்பிய 112 பேரில் 6 பேருக்கு எபோலா நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
லைபீரியாவில் இருந்து 112 பேர் இந்தியா திரும்பினார்கள். அவர்கள் மும்பை மற்றும் டெல்லிக்கு விமானங்கள் மூலம் வந்தனர்.
மும்பைக்கு 2 விமானங்களில் 85 பேர் வந்து இறங்கினர். அவர்களுக்கு ‘எபோலா’ மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் யாருக்கும் இந்த நோய்க்கான அறிகுறி இல்லை.
மேலும் 23 பேர் 2 விமானங்களில் டெல்லி வந்தனர். அவர்களுக்கு ‘எபோலா’ மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 6 பேருக்கு அந்த நோய் தாக்கத்தின் அறிகுறி காணப்பட்டது.
இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, விசேஷ முகமூடிகள் மற்றும் ஆடைகள் அணிவிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.