1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (10:42 IST)

விரைவில் இ-பாஸ்போர்ட்

இந்தியாவில் போலி பாஸ்போர்ட் மற்றும் முறைகேடுகளை தடுக்கவும் இ-பாஸ்போர்ட் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று வெளிஉறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவில் போலி பாஸ்போர்ட் மற்றும் முறைகேடுகளை தடுக்க மற்ற நாடுகளை போல இ-பாஸ்போர்ட் சேவையை இந்தியாவிலும் செயல்படுத்தும் நடவடிக்கை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
 
இ-பாஸ்போர்ட் உடன் ஒரு எலக்ட்ரானிக் சிப் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், அதில் சம்பந்தப்பட்டவர் குறித்த எல்லா விவரங்களும் இடம்பெறும் என்றும் வெளிஉறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.