வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2016 (12:34 IST)

குடித்துவிட்டு காவல் நிலையத்துக்கு சென்று காவலரை தாக்கிய இளம்பெண் (வீடியோ இணைப்பு)

மும்பை வோர்லி காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் குடித்து விட்டு காவலர்களை அடித்தும், ரகளை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


 
 
முன்னதாக குடித்துவிட்டு கார் ஓட்டிய அவர் ஒரு டிவைடரில் மோதியதால் காவல் துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு வரவைத்தனர். இந்த சம்பவம் இந்த மாத தொடக்கத்தில் நடந்தது. அப்பொழுது அந்த பெண் இரண்டு ஆண் நண்பர்களுடன் காரில் அதிக வேகத்துடன் சென்று நடைபாதையில் மோதியுள்ளார். இதனால் காவல் துறையினர் அவர்களை பிடித்துள்ளனர்.
 
அந்த பகுதிக்கு ரோந்து வந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காரின் கதவை திறக்குமாறு கூறியபோது அந்த பெண் காவலர்களின் மேல் துப்புவதற்கு முயற்சித்துள்ளார். மேலும் துணை காவல் ஆய்வாளரை கடிக்கவும் முயற்சித்துள்ளார்.

 

நன்றி: abplive.in
 
பின்னர் காவலர்கள் அந்த மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்ற அந்த பெண் கட்டுக்கடங்காமல் ரகளையில் ஈடுபட்டார். அங்கு இருந்த ஒரு காவலரை கண்ணத்தில் அறைந்தார். அவர் காவல் நிலையத்தில் செய்யும் ரகளை காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.