வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (18:02 IST)

மகளை தொந்தரவு செய்தவர்களை தட்டிக்கேட்ட மருத்துவர் அடித்து கொலை

உத்தர பிரதேச மாநிலத்தில் தனது மகளிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட இளைஞர்களை தட்டிக்கேட்ட மருத்துவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 
 
மீரட் மாவட்டத்தில் வசித்து வந்த இன்த்ரேஷ் பரஷர் என்னும் 42 வயது மருத்துவரின் மகளை அவரது வீட்டின் அருகே வசித்து வந்த நிஷு, ராகுல் மற்றும் மான்யன்க் ஆகிய சகோதரர்கள் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாக தெரிகிறது. 
 
இதை குறித்து அப்பெண் தந்தை இன்த்ரேஷிடம் புகார் அளித்ததை அடுத்து அவர், அந்த இளைஞர்களின் தந்தையிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர்கள் மருத்துவர் இன்த்ரேஷ் மருத்துவமனையில் இருந்து திரும்பிய போது, அவரை இரும்பி கம்பி, பைப்புகள் போன்றவற்றால் கடுமையாக தாக்கினர். தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடிய அவரை  மீண்டும் தாக்கியுள்ளனர்  
 
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து  சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.  
 
சம்பவத்தில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளில் ஒருவர் மற்றும் அவர்களது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரை தீவிரமாக தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.