1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 ஜூன் 2019 (20:54 IST)

மதுகுடித்துவிட்டு நோயாளி மீது விழுந்த டாக்டர் ! என்ன கொடுமை இது ?

உத்தரபிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஒரு சமூகநல மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் மது குடித்துவிட்டு நோயாளியின் மீது விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் என்ற இடத்தில் ஒரு சமூகநல மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு விபத்தில் சிக்கிய மதம் என்பவருக்கு சிகிச்சை அளிக்க அவரது உறவினர்கள் அந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துவந்தனர். 
 
அப்போது இரவு நேரல் பணியில் இருந்த மருத்துவர் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாகத் தெரிகிறது. அவர் சிகிச்சைக்கு வந்த நோயாளி மதன் மீதும் தள்ளாடியபடி விழுந்ததாகவும், அவரது சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
அதற்கு மதன் உறவினர்கள்,5 ஆயிரம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.ஆனால் அதை மருத்துவர் ஏற்கவில்லை, இதுகுறித்து மதனின் சகோதர  மருத்துவரிடம் கேட்டுள்ளனர். அதனால் கோபம் அடைந்த மருத்துவர் அவரை தாக்கினார். அதனால் வெகுண்டெழுந்த உறவினர்கள் மருத்துவரை சரமரியாக அடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.