வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : திங்கள், 25 ஜூலை 2016 (17:12 IST)

கேப்டன் தோனி விபச்சார புரோக்கருடன் இருக்கும் புகைப்படங்கள்!

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் பகுதியை சேர்ந்த பிரிந்திரநாத் சன்யால்(62), வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக தெரியவந்ததை அடுத்து இவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.


 
 
இந்த சோதனையின் போது அவர் வெளிநாட்டில் இருந்து பெண்களை கடத்தி பாலியல் தொழில் நடத்தி வந்த தகவல் தெரியவந்தது. இந்த சோதனையின் போது அவரது வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட ஒரு பெண்ணும் மீட்கப்பட்டார். பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
 
ராணுவ அதிகாரிகள், எம்.பி.க்கள், தொழில் அதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் இவருடன் தொடர்பில் இருந்த ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்கள், தோனி மற்றும் ரெய்னா என தகவல்கள் வெளியான.
 
இந்நிலையில் பிரிந்திரநாத் சன்யால் உடன் தோனி மற்றும் ரெய்னா இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கேப்டன் தோனி பிரிந்திரநாத் சன்யால் உடன் இருக்கும் பழைய புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றனர்.

புகைப்படங்கள்:-




 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......