1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2014 (19:03 IST)

மகாராஷ்டிரா புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு

மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாரதீய ஜனதா 123 இடங்களில் வெற்றி பெற்றது.
 
ஆட்சியமைக்க குறைந்தது 145 இடங்களாவது தேவை என்ற நிலையில், தேர்தலுக்கு முன்னர் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, ஆதரவளிக்க முன்வந்தது. பாரதீய ஜனதாவும், சிவசேனா ஆதரவை ஏற்க சம்மதித்து ஆட்சியமைக்க முடிவு செய்தது.
 
இதனையடுத்து புதிய முதல்வரை, அதாவது மகாராஷ்டிரா சட்டசபை பாரதீய ஜனதா தலைவரை தேர்ந்தெடுக்க அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.
 
இதில் 44 வயதாகும் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதலமைச்சராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.