வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (11:03 IST)

டெல்லியில் பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம்

டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி ஒருவர் தனது  நண்பரே தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரளித்துள்ளார்

டெல்லி பல்கலைக்கழக மாணவி காவல்துறையினரிடம் தனது நண்பர் ஒருவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் கூறியதாவது:

“தெற்கு டெல்லி மெஹரெப்லி காவல் நிலையச் சரகத்தைச் சேர்ந்த 25 வயது மாணவி, டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவருக்கும், காஜியாபாதைச் சேர்ந்த 28 வயதுடைய அனில் சர்மா என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டுள்ளது இருவரும் நட்புடன் பழகி வந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை அனில் குமார் சம்பந்தப்பட்ட மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வைஷாலி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

அங்கு சென்ற அந்தப் பெண்ணை, காஜியாபாத், விஜய் நகரில் உள்ள தனது வீட்டுக்கு அனில் குமார் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மெஹரெப்லி காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த பகுதி காஜியாபாத் என்பதால் அந்தப் பகுதி காவல் நிலையத்திற்கு முதல் தகவல் அறிக்கை விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.