வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2015 (13:14 IST)

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம்: சென்னையிலும் உணரப்பட்டது

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் ஏற்படது, அதேபோல சென்னையில் ஒருசில இடங்களில் உணரப்பட்டது.
காத்மண்டு, நேபாளம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில், டெல்லி, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா உள்பட வட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மேலும், ஜெய்பூர், ராஞ்சி, கவுகாத்தி, பாட்னா, ஒடிசா, உத்தரப் பிரதேசம் ஆகிய வடமாநிலங்களிம் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது; தமிழகத்தில் சென்னையிலும் நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நில நடுக்கத்தில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வந்தனர். இந்த நில நடுக்கம் காரணமாக டெல்லி மெட்ரோ ரயில் சேவை சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.
 
இந்த நில நடுக்கம் காலை 11.44 மணிக்கு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தியாவில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.