1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 1 பிப்ரவரி 2015 (14:19 IST)

டெல்லியை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வார் கிரண் பேடி: நரேந்திர மோடி பிரச்சாரம்

டெல்லியில் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, கிரண் பேடி டெல்லியை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வார் என்று கூறியுள்ளார்.
 
டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக முதலமைச்சர் வேட்பாளர் கிரண் பேடியை ஆதரித்து சுமார் 1. 1/2 மணி நேரத்திற்கு மேலாக பிரசாரம் செய்தார்.
 
கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகையில், “டெல்லிக்கு நிலையான அரசு தேவைப்படுகிறது. அரசாங்கத்தை நடத்துவதில் அனுபவம் உள்ள மக்கள், டெல்லிக்கு தேவைப்படுகிறார்கள். கிரண் பேடிக்கு நிர்வாக அனுபவம் இருக்கிறது. மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற வலுவான நோக்கங்கள் கொண்ட பெண் அவர். 
 
டெல்லி வரலாற்றில் கிரண் பேடி பங்கு கொண்டவர். நகரத்தில் உள்ள ஒவ்வொரு தெருவும் அவருக்கு தெரியும். கிரண் பேடி டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார் என்று கூறினார். 
 
மேலும், டெல்லியில் பாரதீய ஜனதாவுக்கு முக்கிய எச்சரிக்கையாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையே கடுமையாக விமர்சித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.