1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2014 (18:05 IST)

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் டெல்லி வந்தடைந்தனர்

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் டெல்லி வந்தடைந்தனர்.
போதைப் பொருள் கடத்தியதாக தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேருக்கும் இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்கியதையடுத்து 5 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
 
இந்திய தூதரக ஏற்பாட்டின்படி கொழும்பில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்பும் 5 மீனவர்களும் டெல்லி வந்தடைந்தனர்.
 
முன்னதாக, நாடு திரும்பியதும் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை மீனவர்கள் சந்திக்க இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். ஆனால் இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் மறுத்துள்ளார்.