வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 9 ஜூலை 2014 (15:47 IST)

மான் வேட்டை வழக்கு: சல்மான்கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மானை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998 ஆம் ஆண்டு இந்தி படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்தார். அப்போது சல்மான்கான் உள்ளிட்ட 6 பேர் அங்குள்ள வனத்தில் மானை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சல்மான் கான் மீது ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு மான் வேட்டையாடிய குற்றத்துக்காக அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ராஜஸ்தான் நீதிமன்றத்தில் சல்மான்கான் மேல்முறையீடு செய்தார். அதை தொடர்ந்து 5 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ராஜஸ்தான் அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அதில் 4 வாரத்துக்குள் சல்மான்கான் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.