வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (13:20 IST)

மெக்கா விபத்து: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்வு

மெக்காவில் ஹஜ் புனித யாத்திரையின் போது ஏற்பட்ட  கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.


 
 
கடந்த 24 ஆம் தேதி மினாவில் உள்ள சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியல் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டனர். அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்டநெரிசலில் சிக்கி 769 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 58 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த மேலும் 16 பேர் இன்று உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 74 ஆக அதிகரித்துள்ளது.