வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (08:08 IST)

குடிக்க 15 ரூபாய் தர மறுத்த தலித் ஜோடி அடித்துக் கொலை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உயர் ஜாதியை சேர்ந்த ஒருவர் தலித் ஜோடி ஒன்றை அடித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது. மது அருந்த 15 ரூபாய் கேட்டபோது தர மறுத்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
குர்ரா பகுதியில் உள்ள லக்மிபூர் கிராமத்தில் உள்ள வயலில் காலையில் வேலைக்கு சென்ற பாரத் நாட் மற்றும் அவரது மனைவி மம்தா ஆகியோரை உயர் ஜாதியை சேர்ந்த அசோக் மிஸ்ரா தடுத்து அவர்களிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார்.
 
அவர்கள் பணம் இல்லை என்று மறுத்ததும் அவர்களுடன் அசோக் மிஸ்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இருவரையும் அசோக் மிஸ்ரா அடித்துக்கொன்றுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட நீதிபதி பி.சி.குப்தா ஆகியோர் அடித்துக்கொல்லப்பட்ட தலித் ஜோடியை பார்த்தனர்.
 
பின்னர் மளிகை கடையில் இருந்த அசோக் மிஸ்ராவை காவல்துறை கைது செய்தனர். 15 ரூபாய் தர மறுத்த தலித் ஜோடி உயர் ஜாதி ஒருவரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.