வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 17 பிப்ரவரி 2018 (12:29 IST)

மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட தந்தை - அதிர்ச்சி செய்தி

தந்தையே தனது மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
பெங்களூர் கல்யாண்நகர் அருகே வசித்து வருபர் ஜோஷி(27). இவர் ஆட்டோ டிரைவராகவும், மெக்கானிக்காகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது பவர்லால் என்பவர் போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். 
 
அதில், கல்லூரி மாணவியான என் மகளை காதலித்த ஜோஷி, காதலர் தினத்தன்று உள்ளாடை ஒன்று வாங்கிக் கொடுத்து, அதை அணிந்து வீடியோ அனுப்பு எனக் கூறியுள்ளார். என் மகளும் அப்படி அனுப்ப, அதை வைத்து தற்போது பணம் கேட்கும் ஜோஷி, இல்லையெனில் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார்” எனக் கூறியிருந்தார்.
 
ஆனால், ஜோஷியிடம் விசாரணை செய்ய போலீசார் அவரின் வீட்டிற்கு சென்ற போது, அங்கு பவர்லாலின் மகள் இருந்தார். போலீசாரின் விசாரணையில், ஜோஷியும், அப்பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது பிடிக்காமல், அப்பென்ணின் தந்தை பவர்லால் பொய் புகார் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
அதாவது, அவர்கள் இருவரையும் பிரிக்க திட்டமிட்ட பவர்லாலுக்கு, அவரின் மகள் தன் காதலனுக்கு அனுப்பிய புகைப்படம் கிடைக்க, அதை சமூக வளைத்தளத்தில் வெளியிட்டு, பழியை ஜோஷி மீது போட்டு விட்டால், தனது மகள் அவரை பிரிந்து தன்னிடம் வந்து விடுவார் என அவர் திட்டம் போட்டுள்ளது தெரிய வந்தது.
 
எனவேதான், மகளென்றும் பாராமல் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.