வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (19:38 IST)

இந்திய துப்பாக்கி சுடுதல் குழுவின் மேலாளர் கைது

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட துப்பாக்கி சுடுதல் குழு, சில பதக்கங்களை வென்றது.

இந்தக் குழுவின் மேலாளரும் பயிற்சியாளருமான அராருல் ஹசன் சவுத்ரி, குழுவினருடன் இந்தியாவுக்குத் திரும்பியபோது, தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார். 
 
தடை செய்யப்பட்ட வெடிமருந்தைக் கொண்டு வந்ததற்காக, அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
 
பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் தற்சமயம் அவர் அலிகாரில் இருப்பதாகவும் தில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.