வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 22 மே 2017 (15:53 IST)

செல்லாத ரூபாய் நோட்டுகளில் கரண்ட் தயாரிக்கும் இளைஞர்!!

ஒரிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு மின்சாரம் தயாரித்துள்ளார்.


 
 
பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயனுள்ள விதத்தில் மாற்ற யோசித்த 17 வயது இளைஞர் ஒருவர் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்.
 
இது குறித்து அந்த இளைஞர் கூறியதாவது, செல்லாமல் போன பழைய ரூபாய் நோட்டுகளில் சிலிக்கான் பூச்சு இருக்கிறது. ரூபாய் நோட்டைக் கிழித்தால் அது நன்கு தெரியும். அதில் வயர் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மரை இணைத்தேன். பின் சூரியஒளி படும் இடத்தில் அதை வைத்து 5 வாட் வரை மின்சாரத்தைத் தயாரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.