செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (21:30 IST)

ஹர்திக் படேல் மீது பணமழை பொழிந்த மக்கள் : வீடியோ

குஜராத்தில் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேல் மீது, நிகழச்சி ஒன்றில் கட்டு கட்டாக பணத்தை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி,பல போராட்டங்களை முன்னின்று நடத்தி வருபவர்  ஹரிதிக் பட்டேல். இவர் சமீபத்தில், குஜராத்தில் நடந்த ஒரு நாட்டுப்புற கலை நிகழ்ச்சி ஒன்றில், ஹரிதிக் பட்டேல் கலந்து கொண்டு பேசினார். 
 
அவரின் பேச்சைக் கேட்டு உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள், அவர் மீது ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்தனர். இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஹர்திக்கின் நண்பர் தினேஷ் இது பற்றி பேசிய போது ''குஜராத்தில், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது இது போன்று ரூபாய் நோட்டுகளை வீசியெறிவது வழக்கமான ஒன்றுதான். காவல்துறை, பேரணி நடத்த அனுமதி தரவில்லை. அதனால்தான் ஹர்திக் பட்டேல் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்'' என்று கூறினார்.