1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2016 (21:04 IST)

திருமண விழாவில் ஸ்வைப் மெஷினுடன் மணமக்கள்

திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


 

 
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், பொதுமக்கள் பணத்தட்டுபாடு ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். திருமண வீட்டார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் மக்களால் மொய் பணம் கூட வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் வடமாநிலத்தில் புதிதாக திருமணம் செய்த தம்பதியினர் ஸ்வைப் மெஷினுடன் வரவேற்பில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், "விருந்தாளிகளிடம் இருந்து திருமண தம்பதிகள் எந்தவித பிரச்னையுமின்றி பணம் பெற, தம்பதிகளுக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் இயந்திரத்தை பரிசாக கொடுக்கலாம்" என ஐடியா கொடுத்து இவர்களின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.