1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (10:02 IST)

என்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி: பிரதமர் மோடி அதிர்ச்சி தகவல்

பாரத பிரதமர் நரேந்திர மோடி, தன்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி செய்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை இன்றைய தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்



 
 
குஜராத் மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ளதை அடுத்து அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பட் என்ற கிராமத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, 'தான் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது தன்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி செய்ததாக கூறினார். சாதி, மதம் ஆகியவற்றை மட்டுமே முன்வைத்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சி அடிப்பையில் தேர்தலை சந்திக்க தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் எதிர்மறை சிந்தனை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, குஜராத் பாஜக தலைவர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்து வருவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.