1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 30 மே 2016 (11:48 IST)

மலைப்பாம்பை விழுங்க தவித்த ராஜநாகம்

மலபார் அருகே தேயிலை தோட்டத்தில் ராஜநாகம் ஒன்று மலைப்பாம்பை விழுங்க முடியாமல் தவித்துள்ளது.


 

 
கேரள மாநிலம் மலபார் அருகே வெற்றிப்பாறையில் உள்ள இரு தேயிலை தோட்டத்தில் ராஜநாகம் ஒன்று மலைப்பாம்பை விழுங்க முயற்சி செய்துள்ளது. இதைக் கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
தேயிலை தோட்டத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் ராஜநாகத்தின் வாயில் சிக்கிக் கொண்டிருந்த மலைப்பாம்பை வெளியே எடுத்தனர். அந்த மலைப்பாம்பு சிகிச்சை அளிக்கும் முன்பே இறந்து போனது. இதையடுத்து பிடிப்பட்ட ராஜநாகத்தை அதிர்ப்பள்ளியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
 
ராஜநாகம் 10 அடிக்கு மேல் நீளம் கொண்டது. 
 
மலைப்பாம்பு வயது குறைவானதாக இருக்கலாம், அதனால் தான் ராஜநாகத்திடம் இருந்து தப்ப முடியவில்லை, என்றனர்.