செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2016 (11:43 IST)

பைக்கில் அழைத்துக்கொண்டு போய் சிறுமி பலாத்காரம்!

பைக்கில் அழைத்துக்கொண்டு போய் சிறுமி பலாத்காரம்!

உத்தரபிரதேசத்தில் சிறுமி ஒருவரை பைக்கில் அழைத்து செல்வதாக கூறி நீண்டு தூரம் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நபரை நேற்று முன்தினம் காவல்துறை கைது செய்தது.


 
 
ஜான்பூர் கேராகாத் பகுதியில் பப்பு என்ற நபர் கடந்த 26-ஆம் தேதி 12 வயது சிறுமி ஒருவரை பைக்கில் அழைத்து செல்வதாக கூறி நீண்டு தூரம் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் பப்பு.
 
இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். இந்த சம்பவங்கள் தற்போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயாருக்கு தெரியாததால் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
 
குற்றவாளியை தீவிரமாக தேடிய காவல்துறை அவரை நேற்று முன்தினம் ஜெய்த்புரா பகுதியில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.