வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 25 நவம்பர் 2015 (22:00 IST)

சிறுமி பாலியல் பலாத்காரம்: காமகொடூரன் 5 பேருக்கு மரண தண்டனை

ஒடிசாவில், சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
ஒடிசாவில் உள்ளது கியோன்ஜர் மாவட்டம். இங்கு பெக்லுன்டி என்ற கிராமத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு 8ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து வீசிவிட்டு சென்றுள்ளனர். சில நாட்களுக்கு பின்பு அந்த சிறுமி உடலில் பயங்கர காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
 
இது குறித்து, இந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான இருவரை வலை வீசிதேடி வந்தனர்.
 
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சிறுமியை கடத்தி சென்று கற்பழித்து, கொலை செய்தது தெரிய வந்தது.
 
இந்த வழக்கு, கியோன்ஜர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்ட காமகொடூரன்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
 
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரை இதுவரை காவல்துறை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.