வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (19:41 IST)

சுதந்திரத்திற்கு பின்னர் முதன்முதலாக மின்சாரத்தை பார்த்த கிராமம்

இந்தியா கடந்த சில ஆண்டுகளில் டெக்னாலஜியில் வெகுவேகமாக முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. அனைத்து துறைகளிலும் விஞ்ஞானம் புகுந்து அமெரிக்கா உள்பட பல மேலைநாடுகளை வியக்க வைத்து வரும் இந்தியாவில், கிராமங்கள் மட்டும் இன்னும் பின்தங்கியே இருப்பது பெரும் சோகமாக பார்க்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது என்பது வேதனையான விஷயம்

இந்த நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில் தற்போதுதான் முதல்முதலாக மின்சாரத்தை பார்த்துள்ளது ஒரு இந்திய கிராமம். சட்டீஸ்கர் மாநிலத்தை செர்ந்த ஜோகபாத்தா என்ற கிராம மக்களுக்கு முதன்முதலாக இன்று முதல் மின்சாரம் கிடைத்துள்ளது.

சட்டீஸ்கர் முதலமைச்சர் ராமன்சிங் அந்த கிராமத்தின் மின் இணைப்பை முதல்முதலாக தொடங்கி வைத்தார். இதை முதல்வர் பெருமையாக கூறிக்கொண்டாலும், சுதந்திரத்திற்கு பின்னும் 70 வருடங்களாக ஒரு கிராமத்திற்கு மின்சாரம் இல்லாமல் இருந்தது இந்தியாவின் ஒரு பெரும் குறையாகவே பார்க்கப்படுகிறது.