1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 15 ஜனவரி 2016 (15:40 IST)

மத்திய அரசு பாதுகாப்பு விவகாரத்தில் தோல்வியடைந்து விட்டது: மாயாவதி

நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.


 

 
உத்தரப் பிரதேச மாநில அரசும், மத்திய அரசும் பின்தங்கிய மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்றும், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றும் மாயாவதி குற்றம் சாற்றியுள்ளார்.
 
மேலும், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு அம்பேத்கார் பெயரை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.
 
அத்துடன், கட்சித் தொண்டர்கள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்குத் தயராக வேண்டும் என்று மாயவதி கேட்டுக்கொண்டுள்ளார்.
 
மாயாவதி தனது 60 ஆவது பிறந்தநாளை எளிமையான முறையில் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.