வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 10 அக்டோபர் 2015 (19:55 IST)

விஜய் மல்லையா வீடு அலுவலகங்களில் சிபிஐ சோதனை

கிங்பிஷர் நிறுவனத்தின் நிறுவனர் விஜய்மல்லையாவின் வீடு மற்றும் அலுவலங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி செய்தனர்.


 

 
விஜய் மல்லையா, மதுபானத் தொழிலில் கொடி கட்டி பறந்தவர். இவரின், கிங்பிஷர் விமான நிறுவனம் கடன் சுமை காரணமாக விமான சேவையை கடந்த 2012ம் ஆண்டு நிறுத்தியது. பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்களும் திருப்பித் தரப்படவில்லை.

விமான நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் சம்பளம் தரப்படவில்லை. கிங்பிஷர் நிறுவனத்திற்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுத்திருந்த ஐ.டி.பி.ஐ வங்கிக்கு, இவரின் நிறுவனம் கடனை திரும்ப தரப்படவில்லை. இதனால் அந்த வங்கி பெரும் நஷ்டமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. 
 
இந்நிலையில், மும்பை, கோவா, பெங்களூர், மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மல்லையாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.