வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (07:56 IST)

ஹைதராபாத்தில் இரும்பு கம்பியால் தாக்கி இளைஞர் படுகொலை:வீடியோ இணைப்பு

ஹைதராபாத்தில் உணவு விடுதிக்குள் புகுந்து இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 
 
ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட்டில் நகைக்கடை வைத்திருந்தவர் முகமது சோகைல். தொழில்பிரச்சனை காரணமாக இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல சோகைல் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இரண்டு பேர் சோகைலை தாக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அருகில் இருந்த உணவு விடுதிக்குள் புகுந்தார்.
 
இருப்பினும் உணவு விடுதிக்குள் நுழைந்த அந்த நபர்கள்  இரும்புக் கம்பியால் சோகைலை கடுமையாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சி.சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அமீர்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.