வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 27 நவம்பர் 2016 (10:23 IST)

அவனின் ஆண்மையை நீக்க வேண்டும்: பிரபல நடிகை ஆவேச பேட்டி!

அவனின் ஆண்மையை நீக்க வேண்டும்: பிரபல நடிகை ஆவேச பேட்டி!

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்களின் ஆண்மையை நீக்க வேண்டும் என பிரபல தமிழ், மலையாள நடிகை மீரா ஜாஸ்மீன் கூறியுள்ளார். கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியாவில் தந்தையே பெற்ற மகளை பலாத்காரம் செய்யும் கொடூரங்கள் நடக்கின்றன.


 
 
இந்நிலையில் கொச்சியில் செய்தியாளர்களிடையே பேசிய பிரபல நடிகை மீரா ஜாஸ்மீன், பாலியல் பலாத்காரம் செய்பவர்களின் ஆண்மையை நீக்குவது தான் அவர்களுக்கு அளிக்கும் சரியான தண்டனையாக இருக்க முடியும். இப்படி செய்தால் அவர்களுக்கு பெண்களை தொட பயம் வரும்.
 
பலாத்கார குற்றங்களை தடுக்கும் கடுமையான சட்டங்கள் தற்போது இல்லை எனவும் மீரா ஜாஸ்மீன் கூறினார். பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பத்து கல்பனாக்கள் என்ற மலையாள படத்தில் நடித்துள்ள மீரா ஜாஸ்மீன் அந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த பேட்டியை அளித்துள்ளார்.