1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (17:16 IST)

ஸ்மார்ட்போனும் செங்கலும் ஒன்னாடா... ரூ..9,134 வீண்

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் பார்சல் அனுப்பட்டதால், வாடிக்கையாளர் அந்த நிறுவனத்தின் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 
கஜனன் காரத் என்பவர் கடந்த வாரம் பெயர் வெளியிடப்படாத பிரபல ஆன்லைன் தளத்தில் ரூ.9,134 செலுத்தி ஸ்மார்ட் போனை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு ஒரு வாரத்துக்குள் போன் டெலிவரி செய்யப்படும் என்று குருந்தகவல் வந்துள்ளது.
 
இதனையடுத்து பார்சலும் வந்துள்ளது. ஆனால், அதனை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதில் ஸ்மார்ட் போனுக்குப் பதிலாக செங்கல் இருந்ததுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.
 
இதனால் கடுப்பில் காரத் அருகில் உள்ள ஹர்சுல் காவல் நிலையத்தில் காரத் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மோசடி வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.