வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 16 ஜூலை 2016 (21:33 IST)

உயிரோடு விளையாடும் சிறுவர்களின் சாகச வீடியோ

உத்திரபிரதேசத்தில் 7 சிறுவர்கள், ஒரு மேம்பாலத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் போது, அங்கிருந்து கீழே உள்ள ஆற்றில் குதிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


 

 
உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபத்தில் உள்ள ஒரு ஆற்றில் உள்ள மேம்பாலத்தில் வழக்கமாக குறிப்பிட்ட நேரங்களில் ரயில்கள் செல்லும். அங்கு வீர சாகசம் செய்ய நினைத்த 7 சிறுவர்கள், அந்த பாலத்தில் மேல் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு ஒரு ரயில் வருகிறது. அந்த ரயில் அருகில் வரும் போது, அவர்கள் ஒவ்வொருவராக கீழே உள்ள ஆற்றில் குதிக்கிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த ரயில் அவர்களை கடந்து செல்கிறது. அதை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
 
இந்த வீடியோ தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்பப்பட்டது. இதைக் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சமூக வலைத்தளங்களிலும், இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 

Courtesy to ANI News