வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2015 (09:14 IST)

டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
 
தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து இரண்டு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு படை வீரர்கள், மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
 
விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைகளுக்கு பிறகே உள்ள செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.