1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 17 டிசம்பர் 2014 (08:46 IST)

எம்.எல்.ஏ. மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய ஸ்வீட் கடைக்காரர்

பீகார் மாநில எம்.எல்.ஏ. மீது ஸ்வீட் கடைக்காரர் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பீகார் மாநிலம், பீளகஞ்ச் சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவர் சுரேந்திர பிரசாத் யாதவ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கயாவிற்கு சென்று விட்டு, மீண்டும் பீளகஞ்ச் திரும்பி கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் கயா திகிரி சாலையில் உள்ள ஸ்ரீராம் தில் குத் பந்தர் என்ற ஸ்வீட் கடைக்கு சுவீட் வாங்க சென்றிருக்கிறார்.
 
ஆனால், அங்கு சுவீட் கொடுக்க நேரமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஸ்வீட் கடை உரிமையாளர் திரேந்திர குமாருக்கும், எம்.எல்.ஏ. சுரேந்திர பிரசாத் யாதவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கோபம் அடைந்த ஸ்வீட் கடை உரிமையாளர் திரேந்திர குமார் கொதிக்கும் எண்ணெய்யை எம்.எல்.ஏ மற்றும் அவரது உதவியாளர் மீது ஊற்றியுள்ளார்.
 
இதில் எம்.எல்.ஏ.வின் காது மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
 
இதுகுறித்து, சுரேந்திர பிரசாத் எம்.எல்.ஏ. காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். அதேபோல் ஸ்வீட் கடை உரிமையாளரும், எம்.எல்.ஏ. மீது காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
 
ஆனால், ஸ்வீட் கடைக்காரரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.