1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 27 ஜூன் 2015 (14:51 IST)

கேரளாவில் பார்வையற்ற சிறுவன் பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்து சாதனை

கேரளாவில் பார்வையற்ற ஒரு சிறுவன் பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்து சாதனை புரிந்துள்ளான்.
 

 
கேரளாவில் அலுவா நகரில் பார்வையற்றோர் பள்ளி ஒன்றில் படித்து வரும் நவ்நீத் என்ற 12 வயது சிறுவன், நீச்சல் சாதனைகளை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். பார்வையை இழந்த போதிலும் இச்சிறுவன் தனது பயிற்சியாளரின் அறிவுரையை காதால் கேட்டபடி 12 நிமிடங்களில் பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்து சாதனை புரிந்துள்ளான்.
 
பார்வையில்லா சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பது சவாலான விஷயமாக இருந்தாலும், நவ்நீத்தின் தந்தை அளித்த ஒத்துழைப்பு காரணமாகவே 12 நாளில் நவ்நீத்துக்கு நீச்சல் பயிற்சி அளிக்க முடிந்ததாக பயிற்சியாளர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.