வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (23:24 IST)

பாஜக தலைவர் சுட்டுக் கொலை

பாஜக தலைவர் சுட்டுக் கொலை

பீகார் மாநில பாஜக மாநில துணைத் தலைவர் விஸ்வேஸ்வர் ஓஜாவை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
 

 
பீகார் மாநில பாஜக துணைத் தலைவர் விஸ்வேஸ்வர் ஓஜா (45). இவர் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பர்சவுரா கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு, காரில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
 
அப்போது, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 12 ஆம் க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் விஸ்வேஸ்வர் ஒஜா காரை வழி மறித்து, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
 
இதில் விஸ்வேஸ்வர் ஓஜா மற்றும் கார் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் மீது குண்டு பாய்ந்தது. இதனையடுத்து, அவர்களை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், விஸ்வேஸ்வர் ஓஜா சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக மரணம் அடைந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.