வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (10:45 IST)

பா.ஜ.க பிரமுகரின் மகனை கடத்திய தீவிரவாதிகள்: ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

பா.ஜ.க பிரமுகரின் மகனை கடத்திய தீவிரவாதிகள்: ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

அசாம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட உல்பா தீவிரவாத அமைப்பு பாஜக பிரமுகரின் மகனை கடத்தியதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.


 


பா.ஜ.க. தலைவரின் மகன் 27 வயதான குல்தீப் மோரனும், அவரை சுற்றி 5 முகமூடி அணிந்த தீவிரவாதிகளும் அந்த வீடியோவில் உள்ளனர். தீவிரவாதிகள் கைகளில் அதிநவீன துப்பாக்கிகள் ஏந்தி இருப்பதால், அந்த காட்ச்சியை பார்த்து, இந்திய பாதுகாப்பு படை அதிர்ச்சி அடைந்துள்ளது.

அந்த தீவிரவாத அமைப்பினர், குல்தீப் மோரனை விடுதலை செய்ய ரூ. 1 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு, அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், மனிதாபிமான அடிப்படையில் குல்தீப்பை விடுதலை செய்ய வேண்டும் எனவும், வன்முறை நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தாது எனவும் கூறியுள்ளார்.