செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (11:36 IST)

பாக் - சீனா ஏவி விட்ட விஷ வாயு: பேஷாய் பேசும் பாஜக மூத்த தலை!

டெல்லி காற்று மாசுக்கு காரணம் பாகிஸ்தான் அல்லது சீனா விட்ட விஷ வாயுவாக இருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். 
 
பாஜக மூத்த தலைவரான வினீத் அகர்வால் ஷர்தா, டெல்லி காற்று மாசு குறித்து சமீபத்தில் பேசியிருந்தார். அவர் கூறியதாவது, ஹரியானா மற்றும் பஞ்சாபில் விவசாய கழிவுகளை எரிப்பதால்தான் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது என்று கூறும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நான் கண்டிக்கிறேன். 
 
இந்தியாவில் காற்றை மாசுபடுத்த அண்டை நாடுகளான பாகிஸ்தான் அல்லது சீனா விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம். பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் அனைத்து நடவடிக்கைகளும் முறியடிக்கப்பட்டுள்ளது. 
இந்த விரக்தியில் பாகிஸ்தான் விஷ வாவுவை இந்தியாவில் வெளியிட்டு உள்ளதா என விசாரிக்க வேண்டும். ஆனால், யாரும் இது குறித்து கவலை பட வேண்டாம்.  கிருஷ்ணராக இருந்து பிரதமர் மோடியும், அர்ஜுனனாக இருந்து அமித் ஷாவும் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பார்கள் என  பேசியுள்ளார்.