வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : புதன், 14 மே 2014 (16:01 IST)

'அத்வானியின் பதவி குறித்து சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்' - நிதின் கட்கரி

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் மத்தியில்  பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை கட்சியின் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். 
 
நாடு முழுவதும் ஒன்பது கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்துமுடிந்துள்ள நிலையில், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
 
இந்நிலையில், தேர்தலுக்கு பின்னர் வெளியிட்டப்பட்ட  கருத்துக்கணிப்புகளில் மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் உருவாகக்கூடிய சூழல் குறித்தும், கட்சியின் முக்கய தலைவர்களான அத்வானி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு அளிக்கப்படவிருக்கும் பதவிகள் குறித்தும் ஆலோசிக்க பாஜகவின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்கரி ஆகியோர் நரேந்திர மோடியை காந்திநகரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, 'வாஜ்பாயி, அத்வானி ஆகியோர் கட்சியின் மூத்த தலைவர்களாவர். அத்வானியின் பதவி குறித்து சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.