செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 31 ஜனவரி 2015 (18:57 IST)

கிரண் பேடி குறித்து ஆபாசப் பேச்சு: குமார் விஷ்வாஸ் மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

பாஜக முதமைச்சர் வேட்பாளர் கிரண் பேடி குறித்து ஆபாசமாக பேசியதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் மீது தேர்தல் ஆனையத்திடம் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கபட்டுள்ளது.
 
பாஜகவின் பிரதநிதிகள் குழுவைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளார்.
 
பாஜக ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் பல புகார் மனுக்கள் அளிக்கபட்டது. இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது ஒரு தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
 
சமீபத்தில் அண்மையில் நடந்த பேரணியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் என்னை பற்றி ஆபாசமாக கருத்துகளை பேசியுள்ளார். இதுகுறித்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கபட்டுள்ளது என்று கிரண் பேடி தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
 
வெளிப்படையாக ஆபாச மற்றும் வக்கிர எண்ணங்கள் கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிடத்தில் இருந்து எது மாதிரியான பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை பெண்கள் எதிர்பார்க்க முடியும் என்று கிரண் பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.