1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (12:16 IST)

பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் பலி

பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரன் மாவட்டம் சின்னாயூதா கிராமத்தில் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற ஆட்டோ மீது அந்த வழியாக வந்த டேராடூன் ரப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 20 பேர் பலியாகினர்.

இந்தக் கோர விபத்தில் 8 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் பலியாயினர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் பலியானவர்களின் சில உடல்கள் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போனது.

பலரது உடல்கள் நீண்ட துரத்திற்குத் தூக்கி வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே மேலாளர் அருண்குமார் மாலிக் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டார். ரயில்வே காவல் கண்காணிப்பாளர் முசாபார்பூர் வினோத் குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.

இதற்கிடையே பீகார் மாநில முதலமைச்சர், பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.