1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 7 ஜூலை 2014 (14:20 IST)

பீகார் நிதியமைச்சரின் பேரன் கடத்தல்

பீகார் நிதியமைச்சர் பிஜேந்திர பிரசாத் யாதவின் பேரன்  மர்ம நபர்களால் கடத்தப் பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதிர் குமார் போரிகா இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-

"பிஜேந்திர பிரசாத் யாதவின் பேரன் மணீஷ், வயது 11 சுபால் மாவட்டம் பார்சா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அவர் கோடை விடுமுறை முடிந்து வீட்டில் இருந்து பள்ளி விடுதிக்கு கடந்த 1 ஆம் தேதி திரும்பியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் யோரோ மணீஷை கடத்திச்  சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மணீஷை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.