வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 26 மே 2016 (11:24 IST)

தீவிரவாத பயிற்சி அளித்த பஜ்ரங்தள் தலைவர் கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாக பஜ்ரங்தள் அமைப்பின் தலைவரை காவல் துறையினர் கைது செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் இளைஞர்களுக்கு தற்காப்பு பயிற்சி என்ற பெயரில் துப்பாக்கி சுட்டுதல் போன்ற தீவிரவாத பயிற்சி அளித்துள்ளனர் சங்பரிவார் அமைப்பான பஜ்ரங்தள் அமைப்பினர்.
 
இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது போன்ற பயிற்சிகள் தொடரும் என அந்த அமைப்பு அறிவித்தது. இதனையடுத்து காவல் துறையினர் அந்த அமைப்பின் தலைவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.